Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொளங்கொண்டை பஞ்.,க்கு சிறந்த சேவைக்கான விருது தலைவருக்கு உற்சாக வரவேற்பு

ஏப்ரல் 08, 2023 01:37

மல்லசமுத்திரம், கொளங்கொண்டை பஞ்சாயத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ், சிறப்பாக பணியாற்றியதின் காரணமாக, பஞ்சாயத்துக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ், சிறப்பாக பணியாற்றிய பஞ்சாயத்துகளுக்கு, கடந்த 5 ஆம்தேதி புது தில்லியில், சிறந்த சேவைக்கான விருதுகள் - 2023 வழங்கப்பட்டது.

அதன்படி, நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், கொளங்கொண்டை ஊராட்சியில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் சிங்கிடம் ஊராட்சி மன்ற தலைவர் குழந்தைவேல் சிறந்த சேவைக்கான விருதினை பெற்றார். 


இந்நிலையில் நேற்று, புதுதில்லியில் இருந்து கொளங்கொண்டை கிராமத்திற்கு வருகை புரிந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு, அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் வரவேற்பு அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்